← முகப்பு பதிவு

உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை

🕐 8 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 8 பார்வைகள்
உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை

உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அச்சட்டத்தினை நீக்காது மீளவும் தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பாடகர் சங்கீத்தனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தமையை கண்டித்து வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இன்றைய அரசாங்கம் எதிர்க் கட்சியில் உள்ள போது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக போராடினர். அதனை இல்லாமலாக்குவோம் என மக்களின் ஆணையினைப் பெற்றனர்.

ஆட்சிக்கு வந்த பின்னர் அச் சட்டத்தின் வாயிலாக மக்களின் உணர்வுகளை அடக்குவதற்கு முயற்சிக்கின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாக மேதாகம் கொழுக்கட்டை விளையாட்டாக மேலுமொரு பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை அமுல்ப்படுத்த எத்தனிக்கின்றனர்.

நாங்கள் சரியான மாற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்கின்றோம்.

அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் தமிழ்த் தேசிய விடுதலைப்பாடல்களை பயன்படுத்தியமை வெளித்தெரிந்த உண்மை.

ஆனால் ஒரு கலைஞன் தன்னுடைய ஆற்றலில் விடுதலைப் போராட்ட இசையை இசைக்கும் போது மிகவும் கொடூரமான சட்ட ஏற்பாடுகளை அரசு அதிகம் பிரயோகித்த உதாரணமே நடைபெற்றுள்ளது.

நாங்கள் நீதிமன்றங்களின் தீர்ப்பினை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதனை மதிக்கின்றோம். மாறாக அரசாங்கம் குற்றங்கள் தொடர்பாக பிரயோகிக்கும் சட்டங்களின் அடிப்படைகள் தொடர்பாவே எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற
2 மணி நேரம் முன்னர்
பதிவு
டிரம்பின் வேண்டுகோளை ஏற்று ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்திவிட்டது என்று ஒரு மூத்த இஸ்ரேலிய
5 மணி நேரம் முன்னர்
பதிவு
இஸ்ரேலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை நிறுத்தப்போவதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது, ஆனால் இஸ்ரேல் லெபனானைத் தாக்கி
5 மணி நேரம் முன்னர்
பதிவு
பொலிசாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஈரானின் இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலை இடைமறித்ததாகவும் தாக்குதல்கள் அபாயமில்லை என அறிவி
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net