← முகப்பு தமிழ்

காலி பகுதியில் திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கிய

🕐 04 Jun 2026 📂 தமிழ் 8 பார்வைகள்

குறித்த சிறுவன் தாக்கப்படும் காணொளி பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெரலபனாதர, தந்தெனியாகந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன், காலி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட திருட்டு முறைப்பாடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் நேற்று (03) புதன்கிழமை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், திருட்டு சம்பவம் குறித்துப் முறைப்பாடு அளித்த தரப்பினரே தனது மகனை மனிதநேயமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கியதாக அச்சிறுவனின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளிப் பதிவுகளையும் ஆதாரமாகக் கொண்டு புலனாய்வாளர்கள் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.

அதன்படி, நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி, மிலித்துவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண், அவரது 47 வயதுடைய கணவர், அவர்களின் 19 வயதுடைய மகன் மற்றும் 17 வயதுடைய மகள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சிறுவனால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் திருட்டுச் சம்பவம் மற்றும் அச்சிறுவன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஆகிய இரு வேறு சம்பவங்கள் குறித்தும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
நாட்டின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் கடந்த 69 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளில் கண்டற
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில்
04 Jun 2026
📰
தமிழ்
அண்மைய எரிபொருள் விலை உயர்வுகளுக்கு இணையாக எரிபொருள் கொடுப்பனவுகள் திருத்தியமைக்கப்படாமையினால், அதைப் பெற்றுக்
04 Jun 2026
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
4 நிமிடங்கள் முன்னர்
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net