தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டின் உள்நாட்டு நிதி நிர்வாகத்தை முறையாக மேற்கொள்வதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அளவு கணிசமான மட்டத்தில் அதிகரித்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
இந்தத் தீர்மானம் மக்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தாது என வலியுறுத்திய அமைச்சர், இது ஒரு குறுகிய காலத்திற்கு மாத்திரமே பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
இந்தக் கடினமான காலப்பகுதிக்குப் பின்னர், நாட்டின் பொருளாதாரம் மிக விரைவில் சாதகமான நிலைக்கு மாறும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.