← முகப்பு செய்திகள்

உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்

உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் களின் விலை உயர்வு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த விலை உயர்வால், பொது மக்களின் அன்றாட வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கடுமையான விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மறுபுறம் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலை நீடித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் உள்ளது. தற்போதைய சூழல் மீண்டும் ஒரு ‘லாக்ட வுன் போன்ற அவசர நிலையை உருவாக்குமோ என்ற பயமும் மக்களிடையே எழுந்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்பது உறுதி என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். ‘மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது போல, ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, மறுபக்கம் தட்டுப்பாடு என இரட்டைச் சுமைகளால் பொதுமக்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் தவிக்கின்றனர்.

எனவே, தமிழக அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். உயர்த்தப்பட்ட பெட் ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், சந்தையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்கும் தீர்வுகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
4 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச்
20 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன் தந்தது?
21 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பது உண்மையா?
50 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
ரூ.15 லட்சம் கோடி ‘போலி கணக்கு’ காட்டிய நிறுவனத்தில் எல்ஐசி செய்த பெரும் முதலீடால் எழும் கேள்விகள்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை காப்பாற்றிய பெண் விமானி
2 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழக
செய்திகள் · 4 நிமிடங்கள் முன்னர்
3
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட
செய்திகள் · 20 நிமிடங்கள் முன்னர்
4
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன
செய்திகள் · 21 நிமிடங்கள் முன்னர்
5
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பது உண்ம
செய்திகள் · 50 நிமிடங்கள் முன்னர்
6
ரூ.15 லட்சம் கோடி ‘போலி கணக்கு’ காட்டிய நிறுவனத்தில்
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் களம் இப்போதே சூடுபிட
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net