அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல் – சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

by admin

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள் உள்ளிட்ட மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யபப்ட்டுள்ளனர். 

அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் உள்ள இரு வீடுகள் மீது நேற்றைய தினம் வியாழக்கிழமை  தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதரர்கள் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்