8
தென்னாப்பிரிக்காவின் கடலோர நகரமான ஜார்ஜ் நகரில் திங்கள்கிழமை ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கிய 11 பேருடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களில் நான்கு பேர் அடித்தளத்தில் சிக்கியுள்ளனர் என என்று பேரிடர் மேலாண்மைக்கான தலைமை இயக்குனர் கொலின் டீனர் கூறினார்.
இன்ற செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்தில், அவசரகால பணியாளர்கள் மாறி மாறி சிறிய தளத்தில் வேலை செய்து, கான்கிரீட் தொகுதிகள் மற்றும் குப்பைகளை கையால் அகற்றினர்.