சஜித்திற்கு 20வரை காலக்கெடு!

by admin

சஜித் பிரேமதாச  எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்திற்கான திகதியை வழங்காவிடின், அவர் விவாதத்தில் இருந்து ஓடியவராகவே கருதப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 விவாதத்திற்கு இம்மாதம் 7, 9, 13 அல்லது 14 ஆம் திகதிகளை வழங்கியதாகவும், ஆனால் அதற்கு உரிய பதில்களை எதிர்க்கட்சி தலைவர் வழங்கவில்லை என்றும் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் 20 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு திகதியையும் தெரிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்