← முகப்பு செய்திகள்

Indian Shooting Legend and National Coach Jaspal Rana Passes Away at 49

🕐 12 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
Indian Shooting Legend and National Coach Jaspal Rana Passes Away at 49

டெல்லி: இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் ஜாம்பவானும், பிரபல பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா, மாரடைப்பு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 49. அவரது இந்த திடீர் மறைவு இந்திய விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை தொடரை முடித்துவிட்டு டெல்லி திரும்பும் வழியில், ஜஸ்பால் ராணாவுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து டெல்லி சாகேட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்தக் குழாய் அடைப்பை நீக்க அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் குணமடைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

Indian Shooting Legend and National Coach Jaspal Rana Passes Away at 49 Due to Cardiac Arrest

ஜஸ்பால் ராணா இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக, கடந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்த மனு பாகரின் பயிற்சியாளர் இவர்தான். மனு பாகர் தவிர சௌரப் சவுத்ரி, அனிஷ் பன்வாலா மற்றும் சின்கி யாதவ் போன்ற பல முன்னணி வீரர்களை உலகத் தரத்திற்கு இவர் உருவாக்கியுள்ளார். இவரது சிறந்த பயிற்சியை பாராட்டி கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு 'துரோணாச்சார்யா' விருது வழங்கி கௌரவித்தது.

பயிற்சியாளராக மாறுவதற்கு முன்பு, இந்தியாவின் தலைசிறந்த துப்பாக்கி சுடுதல் வீரராக ஜஸ்பால் ராணா திகழ்ந்தார். உத்தரகாண்டில் 1976 ஜூன் 28 அன்று பிறந்த இவர், 1994ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் ஜூனியர் பிரிவில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் போட்டிகளில் 9 தங்கம் உட்பட மொத்தம் 15 பதக்கங்களை வென்று, இந்தியாவின் மிக வெற்றிகரமான காமன்வெல்த் வீரராக சாதனை படைத்தார்.

2006 தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 தங்கம் வென்றார். இவரது சாதனைகளுக்காக 18 வயதிலேயே 'அர்ஜுனா' விருதும், 21 வயதில் 'பத்மஸ்ரீ' விருதும் வழங்கப்பட்டது.

ஹர்திக் பாண்டியா இல்லைனா இந்திய அணிக்கு ஆபத்து.. மாற்று வீரராக இவரை கொண்டு வாங்க.. ரெய்னா அறிவுரை

ஜஸ்பால் ராணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல விளையாட்டு வீரர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். "அவரது மறைவு இந்திய விளையாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" என பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net