நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 9 பெண்கள் உட்பட 686 பேர் கைது!

by admin

on Saturday, April 27, 2024

நாடளாவிய ரீதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 9 பெண்கள் உட்பட 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 18 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 6 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 138 கிராம் ஹெரோயின், 163 கிராம் ஐஸ் , 176 கிராம் கஞ்சா , 27 கிராம் ஹெரோயின் மற்றும் 68 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்