சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபானம், சிகரெட்டுகளுடன் 3 வர்த்தகர்கள் கைது !

by admin

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் மூன்று வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 14 , கொழும்பு 12 மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 ,38 மற்றும் 52 வயதுடைய மூன்று வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் நேற்று (9) மாலை 4.30 மணியளவில் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் விமான நிலையத்தின் அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்படும் போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் சோதனைக்குற்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்கள் கொண்டுவந்த பணப்பொதிகளிலிருந்து 124 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் , 1,800 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 9 சிகரெட் பெட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்