கடலட்டை முடிந்தது: அடுத்து நண்டு பண்ணையாம்!

by admin

கட்டுப்பாடற்ற கடலட்டை பண்ணைகள் காரணமாக வடபுல மீன்பிடி கடல் முடக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக நண்டு பண்ணைகள் பெயரில் கடலில்  காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளது.

இதற்கேதுவாக இந்திய முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளனர். அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பின்போது  இலங்கையில் நண்டு வளர்ப்புக்கு பொறுத்தமான இடங்களில் முதலீடுகளை செய்வதற்கும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் ஊடாக குறித்த தொழிலில் ஈடுபடுவோருக்கு வருமானத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று தலீட்டாளர்கள் அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்

குறிப்பாக வடக்கு கடலை இலக்காக வைத்து புதிய நண்டு வளர்ப்பு பண்ணை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்