உயர் சம்பளம் வழங்குவதாகக் கூறி நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பெண் பா லி ய ல் து ஷ்பி ர யோ க ம்!

by admin

உயர் சம்பளம் வழங்குவதாகக் கூறி நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பெண் பா லி ய ல் து ஷ்பி ர யோ க ம்! on Thursday, May 09, 2024

உயர் சம்பளம் வழங்குவதாகக் கூறி நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று (08) கோட்டை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண், சந்தேக நபரான வர்த்தகருடன் வாட்சப் மூலம் அறிமுகமாகியுள்ள நிலையில் குறித்த வர்த்தகர், அவரை உயர் சம்பளத்துடனான வேலைவாய்ப்புக்கான நேர்முகப்பரீட்சையொன்றுக்கு வருமாறு அழைத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதன்போது ,இந்த பெண் நேர்முகப்பரீட்சைக்காக தனது கணவருடன் கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிற்குச் சென்றுள்ள நிலையில் சந்தேக நபரான வர்த்தகர், கணவரைக் கீழ் அறையில் வைத்து விட்டு இந்த பெண்ணை மேல் மாடியில் உள்ள அறையொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்