முறிகண்டியில் விபத்து – இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

by admin

முறிகண்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் ரக வாகனமொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது, கப் ரக வாகனத்தில் பயணித்த இராணுவ வீரர் தவறி விழுந்த நிலையில் பார ஊர்தியின் சில்லுக்குள் அகப்பட்டார். அதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

விபத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 07 பேரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

 சம்பவத்தில் காயமடைந்த 7 பேரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்