வடமாகாண ஊழல்கள் ஓய்ந்த பாடாகவில்லை!

by admin

வடமாகாணசபையினில் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் கிடப்பிலேயே போடப்பட்டுவருகின்றது.

இந்pநிலையில் வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று முறையிட்டுள்ளது.

வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணினிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும். ஆனால் கொள்வனவு கடிதத்திற்கு அமைவாக தங்களின் விலையினை விட ஒரு கணினிக்கு 11 ஆயிரத்து 500 ரூபா அதிக விலையினை கொண்ட வழங்குனரிடம் கொள்வனவு  செய்ய கொள்வனவு கட்டளை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்