சக்தி இல்லத்தில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

by admin

சக்தி இல்லத்தில் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் on Thursday, April 18, 2024

 2024 சித்திரை தமிழ் புத்தாண்டு மற்றும் சர்வதேச மகளிர் தினம் இரண்டினையும் இணைத்த வகையில் சக்தி மகளிர் இல்லச் சிறுமியர்களினால் அண்மையில்  கொண்டாடப்பட்டது.

இல்ல ஸ்தாபாகர்  சி. புஸ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ம.தெ.மேற்கு  முன்னாள் பிரதேச செயலாளராக கடமையாற்றிய. திருமதி தெட்சணகௌரி.தினேஷ் முதன்மை விருந்தினராகவும்   மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்கள அலுவலக பொறுப்பாளர் பா.சந்திரகாந்தன்  சிறப்பு விருந்தினராகவும்,  வன்னி கோப் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சன் சிவஞானசுந்தரம், செயலாளர் திருமதி டாக்டர் மாலதி வரன்  பேராசிரியர் கும்பேஷன் சந்திரசேகரன் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும்  கொல்லலுலை பாடசாலை அதிபர் வ.துஷாந்தன், பன்சேனை பாரி வித்தியாலய  அதிபர்.பவளசிங்கம்,  அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய உப அதிபர்  மா.ஜீவரத்தினம், கணனி ஆசிரியர் திரு வா.சபாஷ்கரன், கிராம சேவை உத்தியோகதர் திருமதி தயாளினி, முன்னாள் இல்ல பொருளாளர் செ.சற்குணம்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வினை எவரெஸ்ட் கல்வி நிறுவனத் தலைவரும் உள வளத் துறை உத்தியோகஸ்தருமான தஅ.கருணாகரன்  நெறியாழ்கை செய்தார்.

தொடர்புடைய செய்திகள்