காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு!

by admin

on Thursday, May 02, 2024

(நூருல் ஹுதா உமர்)

காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு தொடர்பான விசேட கூட்டம் நேற்று (30) காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் அஸ்வர் தலைமையில் காத்தான்குடியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டார். 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிசாஹீர் மெளலானா, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி எம்.எல்‌.ஏ.எம். ஹிஸ்புல்லா, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும், கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான், அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி யூ.எல்.முபீன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல். பரீட், அரசியல் அதிஉயர்பீட உறுப்பினரும், முன்னாள் ஏறாவூர் நகர சபை தவிசாளருமான எம்.எஸ்.நளீம், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ. சமால்டீன், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமது லெப்பை, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான அன்சார், மத்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்