← முகப்பு தலையங்கம்

17-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் அரலேக்கர் அவர்கள் கலந்துகொண்டார்.

🕐 5 மணி நேரம் முன்னர் 📂 தலையங்கம் 2 பார்வைகள்
17-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் அரலேக்கர் அவர்கள் கலந்துகொண்டார்.
அடிபணிந்த அரலேக்கர் – முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு சட்டப்பேரவை ஆரம்பம்!

17-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் அரலேக்கர் அவர்கள் கலந்துகொண்டார். அவர் அங்கே சிறப்புரையாற்றுவதற்கு முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட்டது. அதன் பின்னரே தேசிய கீதம் பாடப்பட்டது. இதற்கு ஆளுநர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மாறாக அவர் விஜய் அரசாங்கத்தை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளதோடு, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கும் என்றும் கூறியுள்ளார்.

திமுகவைப் போல ஆளுநரிடம் முரண்டு பிடித்துப் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவிக்காமல், முதல்வர் விஜய் மிகவும் சாதுரியமாகக் காய் நகர்த்திச் செல்கிறார் என்றே பலராலும் பார்க்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க, மத்திய அரசையும் விஜய் மிகக் கடுமையாக எதிர்க்கவில்லை. மும்மொழிக் கொள்கையைத் தாம் எதிர்ப்பதாகவும், சில மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார் விஜய்.

மத்திய அரசு கல்விக்கென்று ஒதுக்கிய 8,000 கோடி நிதியைத் தமிழகத்திற்கு வழங்காமல் தற்போது வரை இழுத்தடித்து வருகிறது. ஆனால் அந்த 8,000 கோடி நிதியை விஜய் அரசு பெற்றுவிடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதலை விஜய் அவர்கள் ஏற்கனவே மோடியிடம் பெற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு ஊழலற்ற நல்ல அரசு உருவாகியுள்ளது என்று ஆளுநர் கூறியுள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் எந்தவொரு குழப்பமும் இன்றி, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளுநர் உரை சட்டசபையில் சுமுகமாக நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு மேலும் மேலும் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதில் தவெக (TVK) அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. அமைச்சர் கீர்த்தனா அவர்கள் விரைவில் சீனா மற்றும் ஐரோப்பா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு ஒரு வளர்ச்சிப் பாதையை நோக்கி முதல் தடவையாக நகர்கிறது; அதுவும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
‘Moscow will burn’, Zelensky vows as Russia’s capital is blanketed in toxic
24 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பச்சிளம் குழந்தைகள் மீதா
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தூத்துக்குடியில் கொலை வழக்குப் பழிவாங்கலாக வீடு ஒன்றின் மீது மண்ணெண்ணெய் குண்டு (பெட்ரோல் குண்டு) வீசிய
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த 27 வயது இளம்பெண்ணிடம் நயவஞ்சகமான முறையில்
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உக்ரைன் இதுவரை நடக்காத ஒரு பெரும் ட்ரோன் தாக்குதலை ரஷ்யா மீது ஏவியுள்ள நிலையில், குறித்த
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஆற்றிய உரை முற்றிலும் ஏமாற்றமளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக்
5 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
(செ.கவிஷனா)இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை
தமிழ் · 18 Jun 2026
2
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ்
3
டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படு
4
Former Indian opener Krishnamachari Srikkanth has urged fans to s
5
அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.எட
6
காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்க
7
தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net