தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் வெற்றி குறித்த தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அவரது இரசிகர்கள் குழுவினர் சனிக்கிழமை (09) ஹட்டன் வெலிஓயா தோட்டத்தில் கொண்டாட்ட விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போதும் “முதல்வர் விஜய்” கோஷத்தையும் எழுப்பிய நிலையில் தளபதி தவெக தலைவர் விஜய்யின் பெரிய புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதைத் திறந்து வைத்த பிறகு, பட்டாசுகளை வெடித்து தளபதி விஜய்யின் கட்சியின் கொடிகளையும் மேலங்கியும் அவரது இரசிகர்களுக்கு வழங்கப்பட்டன.
இறுதியில் குறிப்பாக இந்த விழாவையொட்டி, தளபதி விஜய்யின் இரசிகர்கள் தலைமையில் அப்பகுதி பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.



