முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் விலக ராஜினாமா கடிதம் டெல்லி தலைமையிடம் அளித்து இருந்தார். இதனை டெல்லி தலைமை ஏற்று கொண்டதை அடுத்து, இன்றைய தினம் தனது அடுத்த அரசியல் பயணத்தை அண்ணாமலை அறிவித்தார். புதிய அரசியல் கட்சி விரைவில் தொடங்க உள்ளதாகவும், அடுத்த பொதுத்தேர்தலில் தனது புதிய கட்சி போட்டியிடும் எனவும் அறிவித்தார். மேலும் கட்சியில் இணைய லிங்க் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் மனைவி லதா, புதிய இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளார். மக்கள் மேடை மக்கள் இயக்கம் எனும் அமைப்பை லதா ரஜினிகாந்த் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்துள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோக்கலாம் என்றும்.
ஆக்கபூர்வமான கருத்துகள், அனுபவங்கள், திறமைகளை மக்கள் சேவைக்கு பயன்படுத்தும் தளம் மக்கள் மேடை என வீடியோவில் லதா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்றவர்கள், இளைஞர்கள் என மாற்றத்தை விரும்புவோர் பங்கேற்கலாம். ஒன்றாக சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம் எனவும் லதா ரஜினிகாந்த் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.