← முகப்பு செய்திகள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்ததளபதியும் சமர்க்களநாயகனுமான பிரிகேடியர் பால்ராஜிற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உற

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்ததளபதியும் சமர்க்களநாயகனுமான பிரிகேடியர் பால்ராஜிற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உற
சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்ததளபதியும் சமர்க்களநாயகனுமான பிரிகேடியர் பால்ராஜிற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போதே ரவிகரன் எம்.பியால் பிரிகேடியர் பால்ராஜிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர்.

உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net