தமிழ்நாட்டின் புதிய சபாநாயகரை சந்தித்தார் யாழ். தொண்டைமானாறு இந்து சமய, சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர்
யாழ். தொண்டைமானாறு இந்து சமய, சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சேவா திலகம் வீ.ஆர். தொண்டமநாபன் இன்று வெள்ளிக்கிழமை (22) தமிழ்நாட்டின் புதிய சபாநாயகர் யெ.சி.டி. பிரபாகரரை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் மரியாதையின் நிமித்தம் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் பின்னரான உரையாடலின்போது, சமீபத்தில் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தொண்டைமானாறு செல்லச் சந்நதி முருகன் ஆலய வழிபாட்டுக்கு தம்மால் அழைக்கப்பட்டு, வரவேற்பு உபசாரம் செய்யப்பட்டமை பற்றியும் புதிய சபாநாயகருக்கு கழகத் தலைவர் தெரியப்படுத்தினார்.