← முகப்பு பதிவு

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தி

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 88 பார்வைகள்
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தி
கல்விளான் மக்களுக்கு மாற்றுக்காணிகளை கொடுத்து, சொந்த காணிகளை பறிக்காதீர்கள் !

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அலர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இடம்பெற்றபோதே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

பருவப்பெயர்ச்சி மழைக்காலங்களில் பாலியாறு பெருக்கெடுத்து கல்விளான் பகுதியிலுள்ள குடியிருப்பிற்குள் வெள்ள நீர் உட்புகுவதால் அந்தப்பகுதியில் குடியிருக்கின்ற மக்கள் பலத்த பாதிப்புக்களுக்க முகங்கொடுத்துவந்தனர்.

இந்நிலையில் குறித்த வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படுகின்ற கல்விளான் பகுதியைச் சேரந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்த கல்விளான் பகுதியைச்சேர்ந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது, அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகள் மற்றும் வீடுகளையும் பிரதேச செயலகம் மீளப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அந்த மக்களே அந்தக் காணிகளையும், வீடுகளையும் தொடர்ந்து பயன்படுத்த இடமளிக்கப்பட வேண்டும்.

அந்த கல்விளான் குடியிருப்பு அனர்த்த காலங்களில் குடியிருப்பதற்கு பொருத்தமற்ற இடம் என்பதற்காகவே, அந்த மக்களுக்களை வேறு இடங்களில் குடியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அங்கு அந்த மக்களால் நடப்பட்ட பலந்தரு நீண்டகாலப் பயிர்களும், அந்தமக்களுக்கான பொருளாதார வளங்களும் உள்ளன. அனவே அந்தக்காணிகளையும், வீடுகளையும் அந்த மக்களே பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப்படவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்நிலையில் துணுக்காய் பிரதேச செயலாளர் இதன்போது பதிலளிக்கையில்,

சுற்றுநிருபத்தின்படி அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகளிலுள்ள வீடுகள்ள இடித்ழிப்புச் செய்யப்படவேண்டும். மீண்டும் அந்த மக்கள் அங்கு குடியிருக்க முடியாது.

எனினும் தாங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. எம்மால் அந்த வீடுகளை உடைப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்படாது.

அவர்கள் அந்த வீடுகளையும், காணிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அத்தோடு அந்த மக்களுக்ளுக்கு புதிதாக வழங்கப்படுகின்ற காணிகளுக்கு பிரதேச செயலகத்தால் எதிர்காலத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் பழையவீட்டில் இருக்கும்போது அனர்த்தம் ஏற்பட்டு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்குரிய நிவரணங்கள் எவற்றையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறானதொரு கட்டுப்பாடு உள்ளது என்றார்

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
7 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Did Vaibhav Suryavanshi insult Virat Kohli? Harsha Bhogle Slams F
2
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
3
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
4
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 28 நிமிடங்கள் முன்னர்
7
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net