மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில்!
மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவசர விவாதம் ஒன்றை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா முன்வைத்த யோசனைக்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது.
அதன் பிரகாரம், இன்று வியாழக்கிழமை (21) மாலை 3.30 முதல் 5.30 வரை விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.