← முகப்பு பதிவு

புயல் அனர்த்தத்தின் பின்னரான அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பரந்தளவிலான பொதுச் சேவைகளைப் 'பொருந்தும்

🕐 5 நாள்கள் முன்னர் 📂 பதிவு 18 பார்வைகள்
புயல் அனர்த்தத்தின் பின்னரான அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பரந்தளவிலான பொதுச் சேவைகளைப் 'பொருந்தும்
புதிதாக மேலும் அவசர சேவைகள்!

புயல் அனர்த்தத்தின் பின்னரான அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பரந்தளவிலான பொதுச் சேவைகளைப் 'பொருந்தும் அத்தியாவசிய

சேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார்.

இன்று (28) வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

அரச கூட்டுத்தாபனங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் பிரதான சேவைகளை வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளது.

அதன்படி, மின்சார விநியோகம், எரிவாயு உட்படப் பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, பொதுப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகச் சேவைகள், நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் விவசாயக் காப்புறுதிச் சேவைகள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மருந்தகங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு, உணவு வழங்குதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சுகாதாரச் சேவைகளும் இந்த அத்தியாவசிய சேவைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஆம்புலன்ஸ் சேவைகள், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கி மற்றும் காப்புறுதிச் சேவைகள், உள்ளூராட்சி அதிகார சபைகளினால் மேற்கொள்ளப்படும் நீர், மின்சாரம், கழிவுநீர் அகற்றுதல், தீயணைப்பு மற்றும் கழிவு மேலாண்மை போன்ற அனைத்துச் செயற்பாடுகளும்; உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 25 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net