← முகப்பு தலையங்கம்

செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு விண்கலம் திடீரென ஆஃப் ஆகியுள்ளது. அதில்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 தலையங்கம் 4 பார்வைகள்
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு விண்கலம் திடீரென ஆஃப் ஆகியுள்ளது. அதில்
ஏலியனை ஆய்வு செய்த நாசாவின் விண்கலம் திடீரெனச் செயலிழந்துள்ளதாகத் தகவல்!

செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு விண்கலம் திடீரென ஆஃப் ஆகியுள்ளது. அதில் இருந்து எந்தவொரு தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், குறித்த ஆய்வு விண்கலம் நிரந்தரமாகச் செயலிழந்துள்ளது என்று நாசா சற்று முன்னர் அறிவித்துப் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது. காரணம் கடைசியாக இந்த ஆய்வு விண்கலம், 3I/ATLAS என்ற ஒரு அன்னிய விண்கல்லை ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்துள்ளது.

எமது பால்வெளி நட்சத்திரக் கூட்டத்திற்கு அப்பால், வேறு தொலைவில் இருந்து ஒரு விண்கல் எமது சூரிய குடும்பம் நோக்கி வருகிறது. இந்த விண்கல் தொடர்பாகவே நாசாவின் விண்கலம் ஆராய்ந்து வந்தது. சில புகைப்படங்களை அது அனுப்பியது. ஆனால் தொடர்ந்து அந்த மர்மமான விண்கல்லை ஆராய்ந்து வந்த நிலையில் ஏன் திடீரெனச் செயலிழந்தது என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல மாதங்களாக எந்தவொரு கோளாறும் இன்றி இயங்கி வந்த அந்த ஆய்வு விண்கலம், ஒரு குறிப்பிட்ட மற்றும் மர்மமான ஒரு விண்கல் தொடர்பாக ஆராயும் வேளை மட்டும் செயலிழக்க, என்ன காரணம்? இது தற்செயலாக நடக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. சமீபகாலமாக பூமியில் மற்றும் எமது சூரிய மண்டலத்தினுள் அடிக்கடி ஏலியன்கள் வந்து செல்வதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எமது பூமி பெரும் ஆபத்தில் இருப்பதாகச் சீனா நேற்று முன்தினம் (02) ஒரு பரபரப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் அமெரிக்கா தான் ஏலியன்கள் தொடர்பாகப் பேசி வந்தார்கள். சில ஆதாரங்களை வெளியிட்டார்கள். ஆனால் சீனா எந்தவொரு அறிவிப்பையும் விடுத்ததே இல்லை. இருப்பினும் சீனா தற்போது இந்த அறிவித்தலை விட என்ன காரணம் என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில் தான் சீனா இப்படி ஒரு அறிவித்தலை விட்டுள்ளது.

யார் கண்டது? திடீரென ஒரு விண்கல் பூமியில் மோதக்கூடும். அதில் இருந்து திடீரென வெளியாகும் ஒருவகையான உயிரினம் மனிதர்களை அழித்துப் பூமியைத் தாம் கைப்பற்றப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. பூமி உருவாகிய பின்னர், விண்கற்கள் பூமியில் மோதி, வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த அணுக்களால் தான் பூமியில் உயிரினமே தோன்றியது என்பது விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை. பூமியில் உள்ள தண்ணீர் கூட, ஒரு வேற்றுக்கிரக வேதியல் பொருள் தான். இதனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்! நாம் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. தங்க நகைகளை மக்கள் வாங்கி அணிகிறார்கள். ஆனால் எத்தனை பேருக்குத் தெரியும் தங்கம் இந்த பூமியில் உருவாகிய ஒரு உலோகமே இல்லை. அதுவும் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்த ஒரு உலோகத் தாது தான்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோஸ்டா பிளாங்கா (Costa Blanca) சுற்றுலாத
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் நடுவானில்
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் (Fronti
3 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Did Vaibhav Suryavanshi insult Virat Kohli? Harsha Bhogle Slams F
2
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
3
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
4
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 46 நிமிடங்கள் முன்னர்
7
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net