← முகப்பு தமிழ்

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை இரத்துச் ச

🕐 12 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

மேல்முறையீட்டு நீதிமன்றத் நீதிபதி ரோஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இம்மனு வியாழக்கிழமை (11) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்தியல் இலங்கையில் எவ்வாறு செயற்பட்டது என்பதை விளக்கினார். 39 இலங்கையர்கள் சிரியாவுக்குச் சென்று அவ்வமைப்பில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

மாவனல்ல புத்தர் சிலைகள் உடைப்புச் சம்பவம் மற்றும் சஹ்ரான் ஹாஷிமின் குழுவினர் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலாந்த ஜயவர்தனவினால் 97 எச்சரிக்கை அறிக்கைகளும் 129 பேர் அடங்கிய பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அத்துடன், கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி இந்தியப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்திருந்தது.

எனினும், சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று விசாரணைகளை முன்னெடுக்காமல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் அலட்சியமாகச் செயற்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பிருப்பதாக எந்தவொரு விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலும் கண்டறியப்படவில்லை எனவும், தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜயகீ த அல்விஸ் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து மேலதிக சாட்ச்சி பதிவுகளுக்காக மனு மீதான விசாரணை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அ
12 Jun 2026
📰
தமிழ்
(க.சிவலிங்கமூர்த்தி)உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும் போது, பாராளுமன்ற அறை ஒன்றுக்குள்
12 Jun 2026
📰
தமிழ்
ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் ஈரானியத் தலைமையின் உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒப
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (11)
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் இல்லாவிட்டால், இந்நாட்டு மக்கள் பசியால் இறக்க நேரிட்டிருக்கும் என
8 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net