← முகப்பு செய்திகள்

நுவரெலியா – பம்பரகலை தோட்டத்தில் வரம் அருளும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
நுவரெலியா – பம்பரகலை தோட்டத்தில் வரம் அருளும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா
நுவரெலியா – பம்பரகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா

நுவரெலியா – பம்பரகலை தோட்டத்தில் வரம் அருளும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

தொடர்ந்து சனிக்கிழமை (23) அன்று புண்ணிய வாசகம் கிரிகையுடன் பால்குட பவனி நடைபெற்று பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மாலையில் வேட்டை திருவிழாவும் நடைபெற்றது.

அத்துடன் நேற்று (24) அன்று பறவைகாவடி மற்றும் தீ மிதிப்பு நடைபெற்று மாலையில் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று (25) சிறப்பு அபிஷேகம் இடம்பெற்று திருவிளக்கு பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜையுடன் தீப ஆராதனை இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க மேள வாத்தியங்களுடன் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்படட தேரில் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களின் வெளி வீதியூடாக தேரேறி வலம் வந்ததது குறித்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து நாளை (26) பச்சை சாத்துதல் மாலை மாவிளக்கு பூஜையுடன் பூங்காவன பூஜை நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net