← முகப்பு செய்திகள்

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) திங்கட்கிழமை பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) திங்கட்கிழமை பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம்
கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் உயிரிழப்பு

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) திங்கட்கிழமை பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது கரடி போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களே் மோதியதில் குறித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் தங்களது பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் வேகமாக ஓடிதிரிந்தாக சம்பவத்தை அவதானித்த பொது மக்கள் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் குறித்த இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவனும் காயமடைந்துள்ளான். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net