← முகப்பு தலையங்கம்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக

🕐 11 Mar 2026 📂 தலையங்கம் 70 பார்வைகள்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக தாக்கி பலாத்கார மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக தாக்கி பலாத்கார மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஆவார். தற்போது அரசியலில் இருந்து விலகி, கன்னட திரைப்பட தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மற்றும் பின்னர் சுப்ரீம் கோர்ட்டு அதனை ரத்து செய்தது குறித்து ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில் தர்ஷனை விமர்சிக்கும் வகையில் அவர் கருத்து கூறியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சில ரசிகர்கள், நடிகை ரம்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமாகவும் தகாத வார்த்தைகளிலும் குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், பாலியல் பலாத்கார மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகை ரம்யா பெங்களூரு போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் தர்ஷனின் ரசிகர்களாக கூறப்படும் 12 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தற்போது பெங்களூரு 46-வது செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. கைதான 12 பேருக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க நடிகை ரம்யாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையில் நடிகை ரம்யாவும், குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். வழக்கின் முதல் சாட்சியாக நடிகை ரம்யா நீதிபதி ராஜீவ் கவுடா முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

பாலியல் மிரட்டல் தொடர்பான விஷயம் என்பதால் நீதிபதி மற்றும் வக்கீல்கள் மட்டுமே உள்ள அறையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த அறை மூடப்பட்ட நிலையில், நடிகை ரம்யா தமக்கு வந்த ஆபாச தகவல்கள் மற்றும் மிரட்டல்கள் குறித்து விரிவாக விளக்கினார். அவரது வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

சுமார் 20 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் நடிகை ரம்யா கோர்ட்டிலிருந்து வெளியேறி காரில் தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று ஒருநாள்,
04 Jun 2026
தலையங்கம்
மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரான் மற்றும் குவைத் நாடுகளுக்கு
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net