← முகப்பு தமிழ்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச

🕐 17 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்ட வேளையில், தான் குற்றமற்றவர் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கின் சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின.

கடந்த 2016ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் கார்பெட் விரிக்கும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சாதகமான முறையில் வழங்கியதன் மூலம், அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
உயிர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி
17 Jun 2026
📰
தமிழ்
இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில், சிறுவர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த மு
17 Jun 2026
📰
தமிழ்
சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்
17 Jun 2026
📰
தமிழ்
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, தன்னை
31 நிமிடங்கள் முன்னர்
📰
தமிழ்
உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் 13 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
(எம்.மனோசித்ரா)உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துத் தனக்குத் தெரிந்த உண்மைகளை குற்றப் புலனாய்வு
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net