← முகப்பு தலையங்கம்

ஈரானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை தொடர்ந்து விசாரிக்க பிர

🕐 08 Mar 2026 📂 தலையங்கம் 80 பார்வைகள்
ஈரானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை தொடர்ந்து விசாரிக்க பிர

ஈரானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை தொடர்ந்து விசாரிக்க பிரிட்டன் பொலிஸாருக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஈரானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை தொடர்ந்து விசாரிக்க பிரிட்டன் பொலிஸாருக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்த நால்வரையும் மார்ச் 13 ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்; மற்ற மூவர் பிரிட்டன்–ஈரான் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22, 40, 52 மற்றும் 55 வயதுடைய இந்த நால்வரும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஹாரோ, வாட்ஃபோர்டு மற்றும் பார்னெட் பகுதிகளில் உள்ள வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.

இதனுடன் தொடர்புடையதாக, ஹாரோவில் உள்ள அதே இடத்தில் குற்றவாளிக்கு உதவியதாக சந்தேகித்து 20 முதல் 49 வயதுக்குள் உள்ள ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக மெட்ரோபாலிடன் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த நபர்கள் பின்னர் மேலதிக விசாரணை நடைபெறும் வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை பொலிஸ் அதிகாரியை தாக்கியதாக சந்தேகித்து கூடுதலாக கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விசாரணையை இலண்டன் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக மெட்ரோபாலிடன் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று ஒருநாள்,
04 Jun 2026
தலையங்கம்
மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரான் மற்றும் குவைத் நாடுகளுக்கு
45 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net