← முகப்பு செய்திகள்

IPL 2027 Dates: BCCI Secretary Devajit Saikia has announced plans to schedule

🕐 18 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
IPL 2027 Dates: BCCI Secretary Devajit Saikia has announced plans to schedule

மும்பை: 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 20வது சீசன், கோடைகால வெயில் மற்றும் முன்கூட்டியே தொடங்கும் பருவமழையைத் தவிர்க்கும் பொருட்டு, முன்கூட்டியே தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28 முதல் மே 31 வரை நடைபெற்றது.

இதில் பெங்களூரு அணி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இருப்பினும், மே மாத இறுதியில் நிலவும் கடும் வெயில் மற்றும் முன்கூட்டியே தொடங்கும் பருவமழை காரணமாக போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடுமையான வெயில் காரணமாக விளையாட முடியாமல் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்தனர்.

IPL 2027 Dates BCCI Secretary Devajit Saikia Reveals Proposed Dates for IPL 2027 to Avoid Severe Weather

இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பேசுகையில், "மே 15ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு, சில மாநிலங்களில் பருவமழையும் தொடங்கிவிடுகிறது. இது மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கும், விளையாடும் வீரர்களுக்கும் உகந்தது அல்ல. எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் 2027 தொடரை மார்ச் 10ஆம் தேதி தொடங்கி, மே 15ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆளும் குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது" என்றார்.

போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பா?

ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை 74ல் இருந்து 94 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக தகவல் பரவி வரும் நிலையில், அது குறித்த கேள்விக்கு பதிலளித்த சைகியா, தற்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்றார்.

சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஏற்கனவே மிகவும் நெரிசலாக இருப்பதால், ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாத கால அவகாசம் கிடைப்பதே கடினமாக உள்ளது. மற்ற நாடுகளின் இருதரப்பு போட்டிகளைக் கருத்தில் கொண்டு, உடனடியாக போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஐபிஎல் தொடரின் போதே தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெருமளவில் சரிவு ஏற்பட்டது. எனினும், ஜியோஸ்டார் ஸ்ட்ரீமிங் மூலம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை சுட்டிக் காட்டி பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

சட்டச் சிக்கலில் சிராஜ், திலக் வர்மா, அம்பதி ராயுடு.. நோட்டீஸ் அனுப்பிய தெலங்கானா கிரிக்கெட் சங்கம்

ஆனால், சமூக வலைதளங்களிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "ஐபிஎல் ஆர்வம்" இப்போது இல்லை என்பதை உணர முடிகிறது. இந்த நிலையில் தான் பிசிசிஐ ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்தவும், போட்டிகள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருக்கவும் திட்டமிட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ் நீரிணை நாளை முழுவதுமாக திறக்கப்பட உள்ளது. மே
18 Jun 2026
செய்திகள்
டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படுவதாக,டில்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு திடுக்
18 Jun 2026
செய்திகள்
Former Indian opener Krishnamachari Srikkanth has urged fans to stop comparing 15-year-old
18 Jun 2026
செய்திகள்
அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.எடப்பாடி பழனிசாமி தன் மகனான மிதுனை அரசியல்
18 Jun 2026
செய்திகள்
காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.880 வரை குறைந்திருப்பது மகளிருக்கு மகிழ்
18 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Jun 2026
முக்கிய செய்திகள்
1
(செ.கவிஷனா)இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை
தமிழ் · 18 Jun 2026
2
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ்
3
டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படு
4
Former Indian opener Krishnamachari Srikkanth has urged fans to s
5
அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.எட
6
காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்க
7
தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net