← முகப்பு செய்திகள்

IPL 2026- Sai Sudharsan 500+ IPL Runs Across Three Seasons For Gujarat

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
IPL 2026- Sai Sudharsan 500+ IPL Runs Across Three Seasons For Gujarat

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் தொடக்க வீரர் சாய் சுதர்சன், ஐபிஎல்-லில் புதிய சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில், அவர் தொடர்ந்து மூன்று சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்தார். 140+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக, இச்சாதனையை நிகழ்த்தி இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றார்.

அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், சாய் சுதர்சன் 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் அவரது மொத்த ரன்கள் 501 ஆனது. ஸ்ட்ரைக் ரேட் 155.10 ஆக பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் 500 ரன்களைக் கடந்த நான்காவது பேட்ஸ்மேன் சுதர்சன் ஆவார். கிறிஸ் கெய்ல் (2011-13), ஷிகர் தவான் (2019-21), விராட் கோலி (2023-25) ஆகியோர் ஏற்கனவே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

விராட் கோலி கண்கள் பொய் சொல்லாது.. அவரை பார்த்து தான் உத்வேகம் பெறுகிறேன்.. குர்னல் பாண்டியா கருத்து

கே.எல். ராகுல் 2018 முதல் 2022 வரை ஐந்து தொடர்ச்சியான சீசன்களிலும், டேவிட் வார்னர் 2014 முதல் 2020 வரை ஆறு தொடர்ச்சியான சீசன்களிலும் 500 ரன்களைப் பதிவு செய்தனர். இது அவர்களின் சிறப்பான நிலைத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

சுதர்சனையும் கெயிலையும் மற்றவர்களிடமிருந்து பிரிப்பது ஒரு தனித்துவமான அம்சம். தொடர்ந்து மூன்று சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்து, 140-க்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்த மைல்கல்லை எட்டியவர்கள் இவர்கள்தான். சுதர்சனின் முந்தைய மூன்று சீசன் ஸ்ட்ரைக் ரேட்டுகள் முறையே 141.29, 156.17, 155.10 ஆக இருந்தன.

இதன் மூலம் சாய் சுதர்சன் சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றியமைக்கும் திறமையால் அறியப்படுகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சவாலான பிட்ச்சிலும், அணிக்காக அதிக ரன்களைக் குவித்து, ஆரம்ப விக்கெட் சரிவில் இருந்து மீட்க உதவியது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இடைவேளையின் போது சாய் சுதர்சன் அளித்த பேட்டியில், "பிட்ச் ஆரம்பத்தில் சற்று மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது. பந்துகள் சீம் ஆகின. நாங்கள் இரண்டு விக்கெட்டுகளைத் தொடக்கத்திலேயே இழந்தோம். எனவே, நான் நீண்ட நேரம் நின்று, ஒரு நல்ல ஸ்கோரை அடித்தாக வேண்டும். ஒருவேளை இன்னும் 10 ரன்கள் கூடுதலாக இருந்திருந்தால் எங்களுக்கு ஒரு கூடுதல் பலமாக இருந்திருக்கும்" என்றார்.

"ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் நிச்சயம் தங்களால் முடிந்த சிறந்த பங்களிப்பை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். 175 முதல் 180 ரன்கள் ஒரு சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும், ஆனால் இந்த ஸ்கோரும் எதிரணிக்கு நல்ல சவாலை அளிக்கும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு பார்ட் ஸ்கோர் தான்" என்று குறிப்பிட்டார்.

IPL 2026: 50வது போட்டியில் ஹெட்க்கு சிராஜ் செய்த சம்பவம்.. குஜராத்திடம் சறுக்குமா சன்ரைசர்ஸ்?

"11, 12 மற்றும் 13வது ஓவர்களிலும் பந்து சீம் ஆனது. பிட்ச் இன்னும் கொஞ்சம் ஸ்டிக்கியாகவே உள்ளது. இது எங்கள் பந்து வீச்சாளர்களின் திறன்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே, இது ஒரு சிறந்த போட்டியாக அமையும் என்று நினைக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net