← முகப்பு செய்திகள்

IPL 2026- KL Rahul should have bought by CSK Auction Strategy Scrutiny

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
IPL 2026- KL Rahul should have bought by CSK Auction Strategy Scrutiny

சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் கே.எல். ராகுலை சிஎஸ்கே அணி வாங்காதது குறித்து முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், விமர்சித்துள்ளார். 2026 ஐபிஎல் ஏலத்தில் அறிமுகமில்லாத இளம் வீரர்களான கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் இருவரையும் தலா ₹14.20 கோடிக்கு சிஎஸ்கே வாங்கிய நிலையில், ராகுலை கைவிட்டது அவருக்கு ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்தார்.

ராகுலுக்காக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஏலம் கேட்ட சிஎஸ்கே, ₹14 கோடிக்கு டிசி அவரை வாங்கியபோது பின்வாங்கியது. இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத், "கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீருக்கு தலா ₹14 கோடி கொடுத்துள்ளீர்கள். ஆனால் கே.எல். ராகுலுக்காக மெகா ஏலத்தில் என்ன செய்தீர்கள்? நீங்கள் ₹13.5 கோடி வரை ஏலம் கேட்டீர்கள். டிசி அவரை ₹14 கோடிக்கு வாங்கியது.

இன்னும் ₹50 லட்சம் கூடுதலாக கேட்டிருந்தால் கே.எல். ராகுல் உங்களுக்கே கிடைத்திருப்பார். கே.எல். ராகுலுக்காக ₹14 அல்லது ₹15 கோடிகளை செலவிட விரும்பாத நீங்கள், மினி ஏலத்தில் அதே விலைக்கு ஒரு இளம் வீரரை விரும்பி வாங்கினீர்கள். இது உங்கள் 'செயல்முறையின்' ஒரு பகுதியா?" என்று கேள்வி எழுப்பினார்.

IPL 2026: வாழ்வா சாவா போட்டியில் சிஎஸ்கே.. GTக்கு எதிராக சென்னை அணி பிளேயிங் லெவன் என்ன?

"கே.எல். ராகுல் சிஎஸ்கே அணிக்கு மிகச் சிறந்த பொருத்தமாக இருந்திருப்பார். சாம்சனை வாங்க ஜடேஜா மற்றும் கரண் மூலம் சுமார் ₹20 கோடி மதிப்பைக் கொடுக்க வேண்டியிருக்காது. மாறாக, கூடுதல் ₹50 லட்சம் கொடுக்க மனமில்லாமல் ராகுலை டிசி-க்கு செல்ல விட்டீர்கள். இந்த தவறுகள், செயல்முறையின் ஒரு பகுதியாக வெளிப்படையாகத் தெரிகின்றன. அன்று நீங்கள் செய்த தவறுதான் இப்போது உங்களுக்கு பாதிக்கிறது," என்று அழுத்தமாகக் கருத்து தெரிவித்தார்.

கே.எல். ராகுல் ஐபிஎல்-லின் மிகச் சிறந்த பேட்டர்களில் ஒருவர். அவர் 158 போட்டிகளில் 46-க்கும் அதிகமான சராசரி மற்றும் கிட்டத்தட்ட 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5,755 ரன்கள் எடுத்துள்ளார். சிஎஸ்கே-யின் ஏல உத்திகளை பத்ரிநாத் தொடர்ந்து விமர்சித்தார். "சிஎஸ்கே தீபக் சாஹருக்காகவும் கடுமையாக முயற்சி செய்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் எம்ஐ-க்குச் சென்றார்.

அவர் சிஎஸ்கே தவறவிட்ட ஒரு நல்ல வீரர். அவர்கள் விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா ஆகியோரையும் வாங்கினர். முடிவுகள் கிடைக்காததால் உடனடியாக மூவரையும் விடுவித்தனர். இது கடந்த மூன்று ஆண்டுகளின் தோல்வியடைந்த செயல்முறையின் ஒரு பகுதியாகும்," என்றும் அவர் சாடினார்.

IPL 2026: சிஎஸ்கே ஒரே வீரரை மட்டும் நம்பினால் வெல்ல முடியாது.. இந்த 3 பேரும் அதிரடி காட்டுங்க- ஜாபர்

களத்தில் சிஎஸ்கே-வின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு சீசன்களில் பிளேஆஃப்களை தவறவிட்டுள்ளது. கடந்த சீசனில் கடைசி இடத்தைப் பிடித்ததுடன், நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஒரே ஒரு லீக்-ஸ்டேஜ் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பிளேஆஃப்களுக்கு தகுதி பெறாமல் வெளியேறும் ஹாட்ரிக் அபாயத்தை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net