← முகப்பு செய்திகள்

35 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட பொலன்னறுவை மாவட்ட வருமான வரி அலுவலக

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
35 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட பொலன்னறுவை மாவட்ட வருமான வரி அலுவலக
35 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாவட்ட வருமான வரி அலுவலக ஊழியர் கைது

35 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட பொலன்னறுவை மாவட்ட வருமான வரி அலுவலக துப்புரவு பணியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிரிவீர ஆறுகட்டு பட்டபெந்திகே சுமித் இந்திக குமார எனும் அலுவலக துப்புரவு பணியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முறைப்பாட்டாளரின் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியை முறைப்பாட்டாளரின் பெயருக்கு மாற்றி காணி உரிமப்பத்திரம் தயாரிப்பதற்காக, குறித்த காணியின் பெறுமதியை மதிப்பிட்டு அப்பத்திரத்தில் குறைவாகக் காண்பிக்க சந்தேகநபர் உதவியுள்ளார். இதன் மூலம் செலுத்தப்பட வேண்டிய முத்திரை வரி கட்டணத்தைக் குறைத்து, மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக 50 ஆயிரம் ரூபா பணத்தை இவர் இலஞ்சமாகக் கோரியுள்ளார்.

பின்னர் குறித்த தொகையை 35 ஆயிரம் ரூபாவாகக் குறைத்துக்கொண்ட சந்தேகநபர், அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

மேலும் செய்திகள்
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
06 Jun 2026
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
06 Jun 2026
செய்திகள்
இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரவி மோகனின்
06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net