← முகப்பு தலையங்கம்

2026 ஆம் ஆண்டு இறுதிவரை மேஷம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 26 பார்வைகள்
2026 ஆம் ஆண்டு இறுதிவரை மேஷம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக

2026 ஆம் ஆண்டு இறுதிவரை மேஷம், கன்னி, தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் உலகம் முழுவதும் அடிக்கடி பேசுபொருளாக மாறுகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ராசிச் சக்கரத்தில் உள்ள 12 ராசிகளில் 4 ராசிக்காரர்கள் சவால்கள், மனஅழுத்தம் மற்றும் இழப்புகளை சந்திக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஷ ராசிக்காரர்கள் இந்த ஆண்டு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இவர்கள் பொதுவாக அமைதியற்ற மனநிலையுடன் இருப்பவர்கள் என்பதால், எந்த ஒரு விஷயத்திலும் முழு கவனம் செலுத்த சிரமப்படலாம். இந்த குணத்தை கட்டுப்படுத்தாத பட்சத்தில் வேலை மற்றும் உறவுகளில் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. மேலும், கோபத்தை கட்டுப்படுத்தாமல் நடந்துகொண்டால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிக சிந்தனை பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என கூறப்படுகிறது. சிறிய விஷயங்களையும் பெரிதாக எடுத்துக்கொள்வது மனஅழுத்தத்தை அதிகரிக்கலாம். மற்றவர்களை விமர்சிப்பது அல்லது தேவையற்ற கருத்துகளை பகிர்வது மோதல்களுக்கு வழிவகுக்கும். அதேசமயம், உடல்நலத்திலும் குறிப்பாக வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உற்சாகமானதாக இருந்தாலும், அவசர முடிவுகள் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். யோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகள் குடும்பத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. குறிப்பாக வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் உருவாகி மனஅழுத்தம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் குடும்பத்தினருடன் ஆலோசிப்பது நல்லது.

கும்ப ராசிக்காரர்கள் 2026 முழுவதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. கவனக்குறைவான செயல்கள் நஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும். மனநிலையிலும் ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக இருக்கலாம். உறவுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும், பொய்யான வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த கால தவறுகளின் விளைவுகளை இந்த ஆண்டு சந்திக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்த
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சில மணி நேரங்களுக்கு முன்னர், ஈரான் வளை குடாவில் தரித்து நிற்க்கும் அமெரிக்க கப்பல் மீது
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
NEVER UNDER ESTIMATE ! தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய மற்றும்
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
கடந்த மே மாதம் 20ஆம் தேதியே மின்சார வாரியத்தில் இருந்து, ஹார்ட் டிஸ்க்குகள் (Hard-Discs) காணாமல்
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
இந்தியாவில் நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா (Rajya Sabha) உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் க
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஸ்பெயின் நாட்டின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டெனெரிஃப் (Tenerife) தீவில், நேற்று மாலை 5
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net