இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு !

by admin

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு !

கிம்புலாவல பிரதேசத்தில் புதிய வைத்தியசாலை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

மிரிஹான , மாதிவெல பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இருவரையும் ஜெயவர்த்தனபுர மற்றும் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இவர்கள் உயிரிழந்தனர் .

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களின் கவனக்குறைவே இந்த விபத்துக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர் .

தொடர்புடைய செய்திகள்