6
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி ! on Saturday, April 27, 2024
கண்டி, தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட கரலியத்த பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுகிதுல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சீமெந்து உற்பத்தி நிறுவனமொன்றில் மின்சாரக் கம்பிகளை அறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.