5
டயானா கமகேவுக்கு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ! on Wednesday, May 08, 2024
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.