← முகப்பு செய்திகள்

வாழைச்சேனை – நாவலடியில் வீடொன்றில் திருட்டு

🕐 04 May 2026 📂 செய்திகள் 82 பார்வைகள்
வாழைச்சேனை – நாவலடியில் வீடொன்றில் திருட்டு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதீனா பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றில் திருடர்கள் தங்களது கைவரிசையினை காட்டியுள்ளனர்.

குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் ஓட்டமாவடி பகுதியிலுள்ள அவர்களின் மகளின் வீட்டில் தங்கியிருந்து மீண்டும் தங்களது வீட்டிற்கு சென்ற போது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத விடயத்தை அறிந்து கொண்ட திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து மின் இணைப்பு வேலைக்காக இருந்த வயர் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) அல்லது நேற்று முன்தினம் சனிக்கிழமை (02) ஆகிய தினங்களில் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
24 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
41 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
51 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
57 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net