தோப்பூர் மற்றும் மூதூரில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைரியா நகர் பகுதியில் 25 வயதுடைய ஒருவரும், தோப்பூர் நூறு வீட்டுத்திட்ட பகுதியில் 20 வயதுடைய ஒருவரும் செவ்வாய்க்கிழமை (12) ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் மற்றும் 2 கிராம் 200 மில்லிகிராம் எடையுடைய ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இக்கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.