சந்தன கத்ரியாராச்சிக்கு விளக்கமறியல்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி இம் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது