புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (05) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டிற்கு அருகில் புதிய மக்கள் முன்னணியினர் முன்னெடுத்த போராட்டத்தின் போது ஒரு குழுவினர், சுகீஸ்வர பண்டார உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல்களையும் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமது ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்து, அநாகரீகமான முறையில் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக விசாரணை கோரி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.