← முகப்பு செய்திகள்

பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

🕐 04 May 2026 📂 செய்திகள் 154 பார்வைகள்
பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் அந்தந்த பீடங்களின் மகாநாயக்க தேரர் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்தச் சட்டம் முன்னரே இயற்றப்பட்டிருந்தாலும், தற்போது இது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த பௌத்த பிக்குகள் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net