← முகப்பு செய்திகள்

நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடிக்குத் தீர்வுகளைக் காண்பது மற்றும் தற்போதுள்ள வெளிநாட்டு கையிருப்புக்களைப் பா

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடிக்குத் தீர்வுகளைக் காண்பது மற்றும் தற்போதுள்ள வெளிநாட்டு கையிருப்புக்களைப் பா
வெளிநாட்டு கையிருப்பை பாதுகாத்தல் குறித்து தீவிர கவனம் தேவை

நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடிக்குத் தீர்வுகளைக் காண்பது மற்றும் தற்போதுள்ள வெளிநாட்டு கையிருப்புக்களைப் பாதுகாப்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்படவேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அவசர அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு நாணயப் பயன்பாடானது மிகவும் பொறுப்புணர்வுடனும், முறையான நிர்வாகத்துடனும் கையாளப்படவேண்டும். இலங்கை போன்ற இறக்குமதிகளில் பெரிதும் தங்கியுள்ள ஒரு நாட்டுக்கு, அந்நிய செலாவணியை பாதுகாப்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான காரியம்.

இதன் காரணமாக, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எவற்றை அத்தியாவசியமற்றவை என வகைப்படுத்துவது என்பதில் அவதானம் தேவை.

ஒருவருக்கு அத்தியாவசியமற்றதாகத் தோன்றும் ஒரு பொருள், மற்றுமொருவருக்கு அத்தியாவசியமானதாக இருக்கக்கூடும். எனவே, இது குறித்து மிகவும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த டொலர் கையிருப்பில் பெரும்பகுதி எரிபொருள் மற்றும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கே செலவிடப்படுகின்றது.

எரிபொருள் இறக்குமதியை எந்த வகையிலும் நிறுத்த முடியாது என்பதால், மாற்று நடவடிக்கையாக வாகன இறக்குமதியைத் தற்காலிகமாக நிறுத்தவேண்டிய நிலை உள்ளது.

எனினும், வாகன இறக்குமதியை முழுமையாகத் தடை செய்தால், தற்பொழுது கடுமையான முயற்சிகளுக்கு மத்தியில் மீண்டும் புத்துயிர் பெற்று வரும் உள்நாட்டு வாகனச் சந்தை முற்றிலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.

வாகனச் சந்தை வீழ்ச்சியடைவதைத் தடுத்து, அதேவேளை டொலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு மாற்று மற்றும் நியாயமான தீர்வை அமைச்சரவை எட்டியுள்ளது.

அதன்படி, வாகன இறக்குமதியைத் தற்காலிகமாகத் தளர்த்துவதைத் தடுத்து, அதனை ஊக்கமிழக்கச் செய்யும் நோக்கில் விசேட கூடுதல் வரி ஒன்றை விதிப்பதற்கும், இந்த விசேட வரி விதிப்பு நடைமுறையை அடுத்த 3 மாத காலத்துக்கு அமுல்படுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
கார் பந்தயங்களில் தன்னால் எவ்வளவு காலம் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் தொடர்ந்து பங்கேற்க விரும்புவதாக
08 Jun 2026
செய்திகள்
Vaibhav Suryavanshi should not be overburdened, says Soruav Ganguly after his India
08 Jun 2026
செய்திகள்
Former spinner Harbhajan Singh slams the national selection committee for excluding Rajat
08 Jun 2026
செய்திகள்
திரையரங்குகளில் வெளியாகிப் பெரும் வசூல் சாதனை படைத்த நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் ஓடிட
08 Jun 2026
செய்திகள்
இந்தியாவின் மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தின் பணம் ஆபத்தில் இருப்பதாக வெளியாகி
08 Jun 2026
செய்திகள்
தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் நாற்காலி மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதி நவீன
08 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net