← முகப்பு செய்திகள்

தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை?

🕐 04 May 2026 📂 செய்திகள் 82 பார்வைகள்
தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை?

ஹேக்கர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் 2.5 மில்லியன் டாலர், மத்திய வங்கியில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை மட்டுமே என்று பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.

இந்தச் செயல் அரசியல் அதிகாரத்தின் செயல் அல்ல. ஒரு பாடசாலையை அதிபர் நடத்திக் கொண்டிருக்கும்போது, ​​வகுப்பறையில் நிகழும் ஒரு சம்பவத்திற்கு கல்வி அமைச்சரை நேரடியாகத் தொடர்புபடுத்துவது போன்ற உதாரணம் இது.

இது மத்திய வங்கியில் தொழில்நுட்ப நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ந்த ஒரு சம்பவம்.

இந்தச் சம்பவம் குறித்து அரசாங்கம் அறிந்தவுடனேயே, அதில் தலையிட்டு, அறிவுறுத்தல்களை வழங்கி ஒரு விசாரணை செயல்முறையைத் தொடங்கியது.

ஜனாதிபதி அனுர திசாநாயக்க மத்திய வங்கிக்கு வந்து பணியாற்றவில்லை. செயலாளரிடமிருந்தே தலையீடு இருந்தது. பின்னர் இது அதிகாரிகளால் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை என்று தற்போது தெரிகிறது.

நிதிச் செயலாளர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலும், அரசியலிலும் அனுபம்கொண்டு எங்களுடன் பணியாற்றியவர். அவரது அறிவை நாங்கள் அறிவோம். அவர் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவார் என்று ஜனாதிபதி நம்பினார்.

இரண்டரை மில்லியன் டாலர்கள் இழப்பு செயலாளரின் திறமையின்மையால் ஏற்பட்டது என்று யாராவது குற்றம் சாட்டினால், நான் அதையும் நிராகரிக்கிறேன். அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பணமும் காணாமல் போனது. தற்போது அது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
26 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
42 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
52 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
58 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net