காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
திருக்கோவில் வட்டமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உனாவக்காடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவரே இவ்வாறு உயிழிரந்துள்ளார்.
கால்நடைகளுக்குத் தீவனம் வெட்டிக்கொண்டிருந்த போது அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் சடலம் திருக்கோவில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.