தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
அதேபோல திமுக அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சேகர்பாபு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், த.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என பல்வேஉ கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், ஆளும் கட்சிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் விஜய்யின் தவெக பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக 98 தொகுதிகளிலும், அதிமுக 64 தொகுதிகளில், திமுக 51 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ம் தேதியும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவியது.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.