← முகப்பு செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகளுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

🕐 04 May 2026 📂 செய்திகள் 82 பார்வைகள்
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகளுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வைத் தொடர்ந்து, இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

இங்கு மாலைதீவு ஜனாதிபதியை மிகவும் அமோகமாக வரவேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 61 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் இடம்பெறும் முகமது முய்சுவின் இந்த இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்களிப்பு, நம்பிக்கை மற்றும் நட்புறவைப் பிரதிபலிக்கிறது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல் எட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மைகள் கிடைக்கும் வகையில் பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகள் உள்ளிட்ட பன்முகக் கூட்டாண்மையை மேலும் வளர்ப்பது மற்றும் பன்முகப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் இங்கு விரிவாகக் கலந்துரையாடினர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும், மாலைதீவு அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இர்திஷாம் ஆதம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான ஜனாதிபதியின் முதன்மைச் செயலாளர் முகமது நசீர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டன

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net