← முகப்பு செய்திகள்

Suryakumar breaks the silence over his captaincy snubbed after shreyas iyer appointed

🕐 06 Jun 2026 📂 செய்திகள் 8 பார்வைகள்
Suryakumar breaks the silence over his captaincy snubbed after shreyas iyer appointed

மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை புதிய கேப்டனாகத் தேர்வு செய்து இந்திய தேசியத் தேர்வுக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணங்கள் மற்றும் அக்டோபர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கேப்டன் பதவியை இழந்த போதிலும், சக வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன் பதவி நியமனத்தை சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். மும்பை தளம் மற்றும் அங்கு இருவரும் இணைந்து விளையாடிய கிரிக்கெட் நாட்களைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, "ரோகித் சர்மாவுக்குப் பின் நானும், இப்போது ஸ்ரேயாஸ் ஐயரும் என வரிசையாக மூன்று டி20 கேப்டன்கள் மும்பையில் இருந்து வருவது பெருமையான தருணம்" என மும்பை டி20 லீக் போட்டி ஒன்றின் போது குறிப்பிட்டார்.

ஸ்ரேயாஸ் ஐயரின் அபாரமான ஐபிஎல் (IPL) கேப்டன்ஷிப் சாதனைகளே அவரை இந்த இடத்திற்கு உயர்த்தியுள்ளது. குறிப்பாக, 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு கோப்பையை வென்று கொடுத்ததோடு, 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற அவரது தலைமைத்துவம் தேர்வுக்குழுவை ஈர்த்துள்ளது. சூர்யகுமாரின் சமீபத்திய பார்ம் சரிவும் இந்த மாற்றத்திற்குப் பின்னணியாக இருந்துள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்வது காலத்தின் கட்டாயம்.. இனி அவர் தான் எதிர்காலம்- அஜித் அகர்கர் கருத்து

இந்த மாற்றம் குறித்து தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் கூறுகையில், "டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டனை நீக்குவது கடினமான முடிவுதான். இருப்பினும், ஒவ்வொரு பெரும் தொடருக்குப் பிறகும் அணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிப்பது அவசியமான நடைமுறை. அந்த வகையில், ஸ்ரேயாஸ் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறார்," என விளக்கம் அளித்தார்.

IND vs AFG: சாய் சுதர்சன், கேஎல் ராகுல் அபார அரைசதம்.. இந்திய அணி ரன் குவிப்பு

கடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற பெருமை இருந்தாலும், தொடர்ச்சியான பார்ம் சரிவு காரணமாக சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியையும், அணியில் தனது இடத்தையும் தற்போது இழந்துள்ளார். இக்கட்டான சூழலிலும், சக வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு, தற்போதைய கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net